அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இந்த வாரம் 12 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, நாளைமறுதினம் (23.09.2023) சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) காலை 06.00 மணி வரை 12 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.