உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனு இரத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில்,  வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய  அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது ஏகமனதாக  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இதற்கான  ஒப்புதல் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *