சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல் : 167 இராணுவ வீரர்கள் பலி!

சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக பதுங்கியிருந்து இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்குவதற்காக சோமாலியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் அண்டை நாடான எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் இராணுவமும் சோமாலியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளன.

அந்த வகையில் சோமாலியாவின் மேற்கு பகுதிகளில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சோமாலியாவிற்குள் எல்லையைத் தாண்டிய சிறிது நேரத்திலேயே பயங்கரவாதிகள் எத்தியோப்பிய துருப்புக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பிய இராணுவ வீரர்கள் குறித்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த இந்த தாக்குதலில் சுமார் 167 எத்தியோப்பிய வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் மேலும் பலரை உயிருடன் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.