மட்டக்களப்பு வாகன விபத்து இருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை, மற்றும் 54 வயதுடைய வான் சாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 49 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.