2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியது.
இவ்விறுதிப் போட்டியானது இன்று (17.09.2023) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகிறது.
இப்போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் போட்டியில் மோதுகின்றன.
இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 7.2 ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தடுமாறி வருகிறது.
மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பத்தும் நிஷங்க இரண்டு ஓட்டங்களுடனும் தனஞ்சய டீ சில்வா நான்கு ஓட்டங்களுடனும் சதீர சமரவிக்ரம மற்றும் சரித்த அசலாங்க ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.