முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தென்னங்காணியிலிருந்தே நேற்று (16.09.2023) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.