விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: சட்டமாதிபரின் தீர்மானம்!

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்  கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியைக் காண விரும்புவதாக“ சர்ச்சைக்கரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது சமூகங்களுக்கு மத்தியில் முரண்பாட்டையும் அதிருப்தியை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டதாக சிங்கள ராவயவின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் முறைப்பாடு செய்ததற்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளளை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா சர்ச்சைக்குரிய குறித்த கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் சாரங்களை சட்டமா அதிபருக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள போதிலும்  சட்டமா அதிபரின் சட்ட ஆலோசனைகளை  இன்னும் தாம் பெறவில்லை எனவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான ஆலோசனைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் விசாரணைகள் 2024 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.