நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை கடத்த முயன்ற இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் நேற்று (15.09.2023) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு இவர்களில் ஒருவர் 26 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளதுடன் மற்றைய பெண் கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இலங்கை பிரஜை எனவும், உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.