மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு: மாகாண ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்!

திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று(14.09.2023) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்களின் குறித்த பிரச்சினை தொடர்பாக கடற்றொழில் சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்ந கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத கடற்றொழிலில் ஈடுபடுபவருக்கு எதிராக கடற்றொழில் திணைக்களம், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் ஆகியோரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடற்றொழிலமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்.  

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.