கைதான மகன் துயரத்தில் உயிரை மாய்த்த தாய் : குருணாகலில் சம்பவம்!

குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகனை பொலிஸார் கைது செய்யதமையால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மஹவ பொலிஸார் வெளியிட்ட தகவலுக்கு அமைய, உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் அவருடன் மூன்று இளைஞர்கள் சேர்ந்து நபர் ஒருவரை தாக்கியதாகவும், அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த பெண் உயிரை மாய்த்ததாகவும் ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எதுஎவ்வாறாயினும் சட்டத்திற்கமையவே அவரது மகன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.