பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க புதிய இலகுரக தடுப்பு அமைப்பு முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக குறைந்தபட்சம் ரூ.1.5 மில்லியன் தொகையில் குறித்த அமைப்பு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் களனி பள்ளத்தாக்கு புகையிரத பாதையில் விபத்துக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கில் கொடகம புகையிரத நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.