15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறித்த நபர் சட்டை பின்கள் இரண்டை விழுங்கியுள்ளார்.
இந்த சம்பவம் பொத்துப்பிட்டிய காவல் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, இரத்தினபுரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தன்னுடைய தவறான உறவிலிருந்த மனைவியின் மகளை வன்புணர்விற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை (06) அழைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இம்முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்த போதே சந்தேகநபர் பதற்றமடைந்து இவ்வாறு சட்டை பின்களை விழுங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.