குருநாகல் – நிகவரட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்மியாகார பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் அடையாளம் கண்டுகொள்ளப்படாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிகவரட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (05.09.2023) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட நபர் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க சுமார் 05 அடி மெல்லிய உடலுடன் கூடியவர் என தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நிகவரட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நிகவரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.