மட்டக்களப்பில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று (05.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாழைச்சேனை கிண்ணியடி விஷ்ணுகோவில் வீதியைச் சேர்ந்த கந்தையா மாமாங்கம் (49 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓமனியா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மாட்டுபட்டிக்கு மாடுகளை மேய்பதற்காக குறித்த நபர் வழமைபோல நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

எனினும் நேற்று காலை வரை வீடு திரும்பாததையடுத்து மாட்டுபட்டியின் உரிமையாளர் அந்த பகுதிக்கு சென்று அவரை தேடியபோது மாட்டுபட்டிக்கு அருகிலுள்ள பகுதியில் உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.