12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: பாடசாலை அதிபர் கைது!

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தேநீர் அருந்தி உபசரித்து வன்புணர்விற்கு உட்படுத்தியதாகவும்
சந்தேக நபர் தனது மார்பகங்களையும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.