உயர்தரப் பரீட்சைப் முடிவுகள் : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

2022(2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 263,933 விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வருடம் 59 பாடசாலை விண்ணப்பதாரிகள் மற்றும், 25 தனியார் விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2022(2023)ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் மாத்திரம் 2023 உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றுவதற்கு விரும்பினால், செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 16 வரை https://onlineexams.gov.lk/eic ஊடாக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்கு https://onlineexams.gov.lk/eic என்ற ஊடாக செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

அத்துடன், பெறுபேறுகள் வெளியிடப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள், அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic ஐ அணுகி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும்பெறுபேறுகள் கிளை – 0112784208/ 0112786616/ 0112784537/ 0112785413

பாடசாலை பரீட்சை மதிப்பீட்டு கிளை – 0112785231/ 0112785216/ 0112784037

ஒன்லைன் பிரிவு – 0113671568

துரித இலக்கம் – 1911

மின்னஞ்சல் முகவரி – gcealexam@gmail.com

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.