எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார்.
ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை பலிகடா ஆக்குவதை நிறுத்து என்ற தலைப்பின் கீழ் விடுத்துள்ள அறிவிப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களின் உரிமைகள் மற்றும் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்து பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாத பின்னணியில் இவ்வருட உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை இனால் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட கூடுவதாகும், இரண்டாம் முறையாக பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் பரீட்சைக்கான திகதி நிர்ணயம் செய்யப்படுவதால் அவர்களுக்கான பரீட்சை ஆய்த்தங்களை செய்ய அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அத்துடன் பாடங்களை மாற்றி மீண்டும் பரீட்சைக்கு தோற்றும் மாண்வர்களுக்கு இந்த குறுகிய காலப்பகுதி போதாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சில மாணவர்களின் பல்கலைக்கழக கனவு மங்கலாகிவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டுகிறார்.