விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து துதிபாடுவோரை அரசு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என சிங்கள கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக இனைந்து இக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரை வடக்கு, கிழக்கில் உள்ள ஒரு தரப்பினரும் , புலம்பெயர் தமிழ் மக்களும் தேசியத் தலைவராக புகழ்ந்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் முழுமூச்சாக தங்களுக்கு வாக்குகளுக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பகிரங்கமாகத் துதிபாடிவருவது வழமையான விடயமே.
இது இவ்வாறு இருக்கையில், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் அல்லது பிரதமராக வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பிரபாகரனைத் துதிபாடியுள்ளார். இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்து, சொத்துக்களை நாசப்படுத்தி பிரபாகரன் உருவாக பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ காரணம் அல்லர் என்பதை மைத்திரிகளோ அல்லது சிங்கள மக்களோ புரிந்துகொள்ள வேண்டும்.
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இனிமேல் யாரும் துதிபாடினால் அவர்களை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.