இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று(02.09.2023) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இந்தியத் தூதரகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். அத்துடன் இரண்டு தினங்களுக்கு அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அவரின் பயணத்துக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.