குருநாகல், நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டு பன்றி வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(31) குருநாகல், நாகொல்லாகம – திம்பிரிவெவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நாகல்லாகம பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஆர்.எம்.பிசோ மெனிகே என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த தாயாரின் மகளும், மகனும் மின்சாரம் தாக்கிப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணையில், வீட்டில் வளர்த்த பூனையைக் காணவில்லை என தாய், மகள், மகன் ஆகியோர் பூனையைத் தேடிச் சென்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது.
காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் 56 வயதுடைய விவசாயி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.