வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று (28.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் (27.08) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற நிலையில் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிசாரால் நேற்று (28.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.