இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்தோனேசியாவின் மாதரத்தில் இருந்து வடக்கே 203 கிலோமீட்டர் தொலைவிலும், 516 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதன் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.