யாழில் நகை திருட்டுக்கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்த கும்பலை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மடக்கி பிடித்ததுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடுகளுக்குள் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி நகை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத், வழிகாட்டுதலின் கீழ், சம்பவத்துடன் தொடர்புடைய நல்லூர் பின் வீதியைச்சேர்ந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் கைதான 4 சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி பகுதியில் நேற்று அதிகாலை அரச உத்தியோகத்தரின் வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டியமை, கல்வியக்காட்டு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி மிரட்டி பணம் கொள்ளை அடித்தமை மற்றும் பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி நகை கொள்ளை அடிக்க முயன்றமை, இணுவில் பகுதியில் வயோதிபர்கள் இருந்த வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி நகை கொள்ளை அடித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சங்கிலியன் வீதி பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு இணுவில் பகுதியில் திருடப்பட்ட நான்கு பவுண் நகைகளும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள், நான்கு கையடக்க தொலைபேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நல்லூர் பின் வீதியால் செல்லும் முதியவர்களை மிரட்டி கைத்தொலைபேசி, சிறிய தொகை பணம் திருடும் சம்பவத்திலும் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.