அஸ்வெசும நலன்புரி பயனாளிகளுக்கு நாளை (29) அல்லது நாளை மறுதினம் வங்கிகள் ஊடாக தமது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக நிவாரணப் பலனைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 8 இலட்சம் எனவும், அதற்கான பணம் இன்று திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.