கிரேன்ட்பாஸ் – இரண்டாம் நவகும்புர பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரால் நேற்று முன்தினம் மாலை அவர் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர் இரண்டாம் நவகும்புர பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் ஏற்ப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.