நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்புக்குள்ளானதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தித் திறன் தேசியத் தேவையில் 15 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.