வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம் குடும்ப பெண்! தீவிர தேடுதலில் பொலிஸார்!

கதிர்காமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் நேற்று (24) வான் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான குடும்ப பெண்ணொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட பெண், தனது மகனை அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, வானொன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கடத்தி செல்லப்பட்ட பெண் குறித்து இதுவரை பொலிஸாருக்கு எதுவித தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

குறித்த கடத்தல் கும்பல் பெண்ணை கடத்தியமைக்கான காரணமோ அல்லது அவரை கடத்திய குழுவினர் தொடர்பிலோ இதுவரையில் தகவல் வெளியாகவில்லை எனவும்,  இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.