பதுளை – ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் நேற்று முன்னிரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், தென்பகுதியில் நடந்த பாரிய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதான சாட்சியாளராக கருதப்படும் நபர் மாத்தறை – கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்