காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத மர்ம நோயால் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தற்போது இம் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டு உள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழப்புகளுக்கு பற்றீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நோய் அறிகுறிகளுடன் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
மேலும் அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.
அத்துடன் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களும் விளக்கமறியல் சிறையில் உள்ள கைதிகளாவர் எனவும், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.