நாட்டில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் மாரடைப்பு காரணமாக சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சில மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் 10 முதல் 15 மாரடைப்பு நோயாளிகள் அனுமதிக்க படுவதாகவும் . இவர்களில் 90 வீதமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனது அன்றாட வாழ்வில் முறையான உணவுப் பழக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை, மன உளைச்சல் போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.