யாழில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தேக்கு மரகுற்றிகள் பறிமுதல்: ஒருவர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வாகனத்தில் மறைத்து கடத்தப்பட்ட தேக்கு மரக்குற்றிகளை யாழ். சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து நேற்று (18.08.2023) பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து கொண்டு சென்ற வேளையிலேயே மரக் குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன. இதன்போது சாரதியான முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதான சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.