வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமுல்படுத்த பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்ந்து இலங்கையை பிரதான சுற்றுலாத் தலமாக கட்டியெழுப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். .
சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான இடமாக இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.