வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று(17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது, வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்கும் உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.