காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை பெய்யாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. (40-45) வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்படுகிறது.