மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம், புத்தம்புரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர் நேற்று (12) இரவு களத்தில் மீன்படிக்க சென்றுள்ளார் காலையில் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர். 

இத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மகிழவெட்டுவான் – ஆயித்தியமலையைச் சேர்ந்த குறித்த மீனவர் 04 பிள்ளைகளின் தந்தையாவார்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.