இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கொழும்பில் உள்ள மாவு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 16ஆம் திகதி முதல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட நிலையில் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மாவு இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் நல்ல பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கோதுமை மா இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் நாட்டில் கோதுமை மாவை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களும் அதன் உற்பத்தியை அதிகரித்து அதன் ஏகபோகத்தை உருவாக முயற்சிப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம் எனவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.