MTFE குழுமத்தின் முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை!

தடைசெய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட MTFE SL குழுமத்தின் நான்கு தலைவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(11) பயணத்தடை விதித்துள்ளது.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் விளைவாக, விசாரணை அதிகாரிகள் நேற்று(11) காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் நேற்று(11) அதிகாலை துபாய் நோக்கி சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரமிட் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பிப்பது உசிதமானது என மத்திய வங்கி முன்னதாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் திறன் உள்ளதால், அவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுத்து வைப்பதே பொருத்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் மேற்படி நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் கீழ் நிறுவனத்தின் செயற்பாடுகள் உள்ளதாக நம்பும் உண்மைகளை வெளி படுத்துவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் ​​இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம், இந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.