சிலாபம் – மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 9 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (11.08.2023)மாலை கயிற்றில் தொங்கிய நிலையில் இந்த சடலம் காணப்பட்டதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சலானி பீரிஸ் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவியின் மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கருதி சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை தோட்டத்தில் நடப்பட்டிருந்த பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது