யாழ்பாணம் – வண்ணார் பண்ணை பகுதியில் சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் ஒன்று நேற்று மாலை அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களால் குறித்த உடற்பாகம் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அச்சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் சிசுவின் உடற்பாகத்தை மீட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த சட்ட வைத்தியதிகாரி சம்பவம் குறித்து ஆராய்ந்ததுடன் மயான பகுதியில் இருந்து சடலம் விலங்குகளால் இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் பகுதியில் அண்மை காலத்தில் குழந்தை பிறசவி்தவர்களை தேடும் பணியும் முன்னெடுக்கபட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.