அரசாங்க மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் உட்பட பல அமைச்சுக்களை இணைத்து விவசாய நவீனமயமாக்கலுக்கான செயலணியொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விவசாயம், பெருந்தோட்டம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சும் மகாவலி அபிவிருத்தி அமைச்சும் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒன்பது மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் இந்த இணைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.