நேற்று (08) காலை ஹசலக்க, மினிபே, மொரயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இக் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவியின் தாய் பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால், மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அத்தோடு காயமடைந்த மாணவியின் மூத்த சகோதரனும் சகோதரியும் மற்றும் தந்தையும் வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாத ஜயசிறிகம என்பவராவார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவிக்கு முகநூல் ஊடாக குறித்த நபரை அறிமுகம் செய்து சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாகவும், மாணவி காதல் உறவை நிறுத்தியதால் தான் அவரை தாக்கியதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்