அறிமுகமாகும் இ-டிக்கெட்டுகள்: பொது போக்குவரத்தில் மாபெரும் மாற்றம்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காக இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு ஏழு தேசிய பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்கள் மாகாண மட்டத்திலும் விரைவில் எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன உள்ளிட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகள் இணைக்கப்படும் என எதிர்பார்க்க படுவதாகவும், அது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.