நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.