மன்னாரில் கோர விபத்து ஒருவர் பலி ஐவர் படுகாயம்..!
மன்னார் பிரதான வீதியில் இன்று (23.05.2023) காலை 11 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து பிரதான வீதி ஊடாக பயணித்த மகேந்திரா வாகனத்துடன் மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி,மூன்று சிறுவர் உள்ளடங்களாக ஐவர் நாளைய இடம் பெறவுள்ள திருமண நிகழ்வுக்கு சென்ற போதே முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
மஹேந்திரா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேநேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.