நாட்டில் நிலவும் காலநிலை மாற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு!

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது.
இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும் எனவும்
மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும் எனவும்
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது எனவும்
காலி – பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும்
யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும் எனவும்
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது எனவும்
இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை எனவும்
திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும் எனவும்
மன்னார் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *