கோப்பாய் ஈவினை பகுதியில் வீடுக்குள் நுழைந்தது அட்டகாசம் செய்த வன்முறை கும்பல்..!
யாழ் கோப்பாய் – ஈவினை பகுதியில் நேற்று மதியம் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல். வீட்டின் யன்னால் மற்றும் கதவுகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் எவரும் கைது செய்யபடாத நிலையில் கோப்பாய் போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.