யாழில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..!
யாழ் அச்சுவேலி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர்- வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (22.12.2022) மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியைச் சேர்ந்த செ. ராகுலன் ( வயது 25) என்ற இளைஞன் இன்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அச்சுவலி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.