நாடு முழுவதும் இருமல், சளி; கடும் குளிருடன் வைரஸ் தொற்றுகளே காரணம்!
நாடு முழுவதும் இருமல் மற்றும் சளி பரவுவதற்கு வைரஸ் மற்றும் டெங்கு போன்ற காரணங்கள் இருப்பதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
தற்போதைய மோசமான குளிர் காலநிலை வைரஸ் தொற்று, கொரோனா தொற்றுடன் அதிகரித்துள்ள டெங்கு நிலை காரணமாக அதிகமான நோயாளிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் மாத்திரம் சுமார் 40 டெங்கு நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜேவிக்கிரம தெரிவித்தார். டிசம்பர் மாதத்தின் முதல் சில வாரங்களில் கொழும்பு மாவட்டத்தில் 254 டெங்கு நோயாளரும் இம்மாதத்தில் நாடு முழுவதும் 1,323 டெங்கு நோயாளரும் பதிவாகியுள்ளனர்.
இந்த நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக மருத்துவரை அணுகுவது சரியான நடவடிக்கையென விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம சுட்டிக்காட்டியுள்ளார்.