200KG ஐஸ், ஹெரோயின் மீட்பு!

200 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், சந்தேகநபர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *