யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்!

வீடுகளை உடைத்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்படடவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு உட்பட பல தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி, புலோலி பகுதியில் உள்ள வீடுகளிலேயே குறித்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் குறித்த நபர்கள் வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடியுள்ளனர்.

புலோலி சாரையடிப் பகுதியில் உள்ள வீட்டில், உரிமையாளர்கள் இல்லாத சமயம் வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டிருந்தன. குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை விசாரணைகளின் போதே பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையின் பின்னர், குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *